ஸ்ரீரங்கம் கோயிலின்
நுழைவாயிலில் இ
ருக்கும் கல்வெட்டுயிது.
தமிழ் கல்வெட்டுதான்
ஆனால் படிக்க முடியலேயே
இது என்ன வகை தமிழ்??
-அறம் கிருஷ்ணன்
நுழைவாயிலில் இ
ருக்கும் கல்வெட்டுயிது.
தமிழ் கல்வெட்டுதான்
ஆனால் படிக்க முடியலேயே
இது என்ன வகை தமிழ்??
-அறம் கிருஷ்ணன்
Arunkumar Pankaj வட்டெழுத்தெல்லாம் இல்லை. நாயக்கர் கால தமிழ்+கிரந்த கல்வெட்டு. அதிக அளவில் கிரந்த எழுத்துக்கள் (சமஸ்கிருத எழுத்துரு) கலந்துள்ளதால் படிக்க இயலவில்லை. உண்மையில் சொல்லப்போனால் இது கிரந்த கல்வெட்டே. கி.பி.15-16 ஆகலாம்.
Arunkumar Pankaj என்னது இது வட்டமாக இல்லையா? பல்லவ எழுத்துக்களை சொன்னாலாவது ஏற்றுக்கொள்ளலாம். பாண்டியர் எழுத்தே வட்டமாக இல்லையா?
Thirukkaambigai Devi ஆம், வட்டமாகத்தான் காணப்படுகிறது! குழந்தைகளின் கைக் கிறுக்கல்களைப் போல .. ஜாங்கிரி போலவும் ... ஆச்சர்யமாகத்தான் மேலும் மேலும் உணர்கிறோம் நம் தமிழகம் மிகவும் சிறந்து காணப்பட்டிருக்கிறது :)
Arunkumar Pankaj இந்த தமிழி எழுத்துடன் மேற்கூறிய எழுத்துக்களை ஒப்பிட்டு பாருங்கள் வட்டமா இல்லையானு தெரியும் :P
Ragavendar TC தென்னிந்திய கல்வெட்டு தொகுதி 24ல் விஜயநகர் பேரரசர்கள் தலைப்பின் கீழ் முதலாம் தேவராயரின் கல்வெட்டு வரிசையில் இக்கல்வெட்டு இடம்பெற்றுள்ளது.
Sankara Narayanan G இது கன்னடக்கல்வெட்டு. க்ரந்த லிபியில் அமைந்தது. உத்தமநம்பி, நாராயணஜீயர் மற்றுமுள்ள ஸ்தானிகர்களுக்கு முதலாம் தேவராயர் காலத்தில் சுண்டக்காயி, கோவத்தக்குடி, தொடயூர் மற்றும் கருங்குளம் ஆகிய சிற்றூர்களைத் தானமளித்து அதன் மூலம் கோயில் பணிகளை மேற்கொள்ள பிறப்பித்த ஆணை..


















No comments:
Post a Comment