Sunday, 24 July 2016

பெருமையாக உணர்ந்த தருணம்

பெருமையாக உணர்ந்த தருணம் 
தமிழக தொல்லியல் கழகம் 26 ம் ஆண்டு கருத்தரங்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கடந்த 23&24.07.16 தேதிகளில் நடைப்பெற்றது.முதல்நாளில்
கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு கூட்டம் சுமார் 500-600 வரை இருக்கும்.வரலாற்றின் மீது அனைவருக்கும் ஆர்வம் பெருகி வருவதை காட்டுகிறது.
மொத்தம் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன அதில் முதல் நூலாக "தமிழ் நாட்டு எழுத்து வளர்ச்சி " என்ற நூலை திரு.கே.எஸ்.தணிகாசலம் வெளியிட நான் பெற்று கொண்டேன்.வாழ்க்கையில் நா







ன் மிகவும் பெருமையாக உணர்ந்த தருணம் அது.காரணம் அருகில் நிற்பவர் பேராசிரியர்.எ.சுப்பராயலு அவர்கள்.அவரின் அனுபவம் அளவு கூட எனது வயது இருக்காது.
‪#‎அறம்கிருஷ்ணன்‬

Friday, 22 July 2016

கவிதை நூல் வெளியீட்டு விழா

கவிதை நூல் வெளியீட்டு விழா
நேற்று (21.07.16) ஓசூர் புத்தக திருவிழாவில் 
ஓசூர்அறம் இலக்கிய அமைப்பு சார்பாக திருமதி 
மணிமேகலை அவர்களின் "வாருங்கள் சிகரம் தொடலாம்"
என்ற கவிதை நூலை திரு.அ




























றம் கிருஷ்ணன் வெளியிட
திருநங்கை ப்ரியாபாபு மற்றும் ரவி தமிழ்வானன்
ஆகிய இருவரும் பெற்று கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஓசூர்அறம் இலக்கிய அமைப்பு சார்பாக 50 நூல்களை பெற்று கொண்டோம்.இந்த விழா நிகழ்வதற்கு அனுமதி வழங்கிய திரு.துரை மற்றும் அவரை சார்ந்த புத்தக விழா குழு நண்பர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தஅனைத்து ஓசூர் வாழ் பொதுமக்களுக்கும்,.
நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
‪#‎அறம்கிருஷ்ணன்‬

Wednesday, 20 July 2016

தமிழக தொல்லியல் கழகத்தின் 26 ஆம் ஆண்டு கருத்தரங்கம் வருக ஜூலை 23 & 24.07.16 தேதியில்

அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் வணக்கும்
தமிழக தொல்லியல் கழகத்தின் 26 ஆம் ஆண்டு கருத்தரங்கம் வருக ஜூலை 23 & 24.07.16 தேதியில்
(சனி மற்றும் ஞாயிறு) கிழமையில் கிருஷ்ணகிரி மாவட்டம் , காவேரிபட்டினம், S.M.கல்யாணி மஹாலில் நடைப்பெற இருக்கிறது.
இம்மாவட்டத்தில்தான்
தமிழ் நாட்டின் முதல் பாறை ஓவியம் மல்லப்பாடியில் கண்டுபிடிக்கப்பட்டது
சோழர்களின் அடையாளமான புலி சின்னம் கலவெட்டுகளில் தமிழ் நாட்டில் வேறு எங்குமே இருப்பதாக பதிவுயில்லை.ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்திற்கு அருகே சோழர்களின் செங்கோலுடன் கூடிய புலி சின்னம் பொறித்த கல்வெட்டு முதன் முறையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் அதிக நடுகற்கல்கள் நிறைந்த மாவட்டம்
அதிகமான கற்திட்டைகள் சுமார் 300 வரை மல்ல சந்திரத்தில் உள்ளன
பாராமஹால் என்று அழைக்கப்படும் 12 கோட்டைகளை உள்ளடக்கியது கிருஷ்ணகிரி மாவட்டம்
கல்ஆயுத தொழிற் சாலை
நாணயம் தயாரிக்கும் தொழிற் சாலை
இரும்பை உருக்குவதற்கான தொழிற் சாலை
இவை எல்லாமே இம்மாவட்டத்தில்தான் உள்ளன
ஓய்சாள அரசன் வீர ராமதானின் தலைநகரமாகயிருந்த
அரண்மணை கிருஷ்ணகிரிக்கு அருகே சின்ன கொத்தூரில்
இன்னும் இருக்கிறது.
இப்படி ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தமிழக தொல்லியல் கழகத்தின் 26 ஆம் ஆண்டு கருத்தரங்கம் இரண்டு நாள் நடைப்பெறயிருக்கிறது.
வரலாற்றின் மீது ஆர்வம் உள்ள அனைவரும் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க
"கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு" சார்பாக அழைக்கிறோம்
.
வாருங்கள்
வரலாற்றை நேசிப்போம்
வரலாற்றை வாசிப்போம்
‪#‎அறம்கிருஷ்ணன்‬



Sunday, 17 July 2016

இமயத்தின் உச்சியில் சோழனின் புலி சின்னம்

இமயத்தின் உச்சியில் சோழனின் புலி சின்னம்
கரிகாற் பெருவளத்தானின் காலம் கி.மு.இரண்டு அல்லது முதலாம் நூற்றாண்டாக இருக்கவேண்டும்.
கரிகாலசோழனின் இமய படை எடுப்பை பற்றி சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளும், பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாரும் பதிவு செய்துள்ளார்கள்.
இமயத்தில் புலி சின்னம் பதித்தை குறிப்பிடும் சேக்கிழார்
"இலங்கு வேற் கரிகாற் பெருவளத்தோன் வண்திறல் புலி இமயால் வரை மேல் வைக்க வெகுவோன்" என்று புலி சின்னம் பொறிக்கப்பெற்றதைக் குறிப்பிடுகிறார்.
சோழர் கணவாய்
சீனர்கள் இமயமலையை திபேத் பகுதியிலிருந்து கடப்பதற்காக பயண்படுத்திய கணவாய்களுள் ஒன்றுதான்
சோழர் கணவாயாகும்.
பூம்புகாரிலிருந்து வடபுலம் நோக்கி சென்ற கரிகாலனது பெரும்படை கிழக்கு கடற்கரையை ஒட்டியே சென்று கலிங்கம்(ஒரிசா) வங்கம் போன்ற நாடுகளை கடந்து இமயத்தின் உச்சியில் சோழனின் புலி சின்னத்தை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
‪#‎அறம்கிருஷ்ணன்‬

Thursday, 14 July 2016

சங்கப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம்

சங்கப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம் 
 
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...
என்ற பாடலை எழுதியவர்ளான பாரி மகளிர் அங்கவை, சங்கவையை திருக்கோவிலூர் மலையமான் திருமுடிக்காரி வழி உறவினருக்கு மணம் முடித்து பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் வடக்கிருந்து உண்ணாநோன்பிருந்து சங்கப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம் திருக்கோவிலூரில்
நன்றி தாய்மலர்
‪#‎அறம்கிருஷ்ணன்‬

Wednesday, 13 July 2016

வரும் (15.07.16-24.07.16)வெள்ளிக்கிழமை முதல் ஓசூரில் புத்தக திருவிழா நடைப்பெற இருக்கிறது

வரும் (15.07.16-24.07.16)வெள்ளிக்கிழமை முதல் ஓசூரில் புத்தக திருவிழா நடைப்பெற இருக்கிறது.தொடர்ந்து பத்து நாட்கள் நடைப்பெரும்.வாசிக்கவும் , வாசித்ததை நேசிக்கவும் வாருங்கள்.
ஒரு புத்தகம் நம்மை என்ன செய்யும்
ஒரு புத்தகம் நம்மை புரட்டிபோடும்
ஒரு புத்தகம் நம்மை நெறிபடுத்தும்
ஒரு புத்தகம் நமது வாழ்க்கையை மாற்றிவிடும்
ஒரு புத்தகம் இன்னோரு புத்தகத்தை உருவாக்கும்
‪#‎அறம்‬ கிருஷ்ணன்




Sunday, 10 July 2016

24 வாது திருமண நாள்

24 வாது திருமண நாள்
மகிழ்ச்சியும் பெருமிதமும்மாய் வாழ்க்கை நீள்கிறது
இணைந்தே பயணிக்கிற இல்லறம் எப்போதுமே சுகம்தான்
விட்டுகொடுத்து போவதில் விருப்பம் நிறைவேறும்
பலதடைகள் கடந்ததே இந்த பயணம்
கவிதை,சிறுகதை,எழுத தொடங்கி இப்போது ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கான பயிற்சியை நோக்கி நகர்ந்து வருகிறேன்.
வாழ்த்துங்கள் வளர்கிறேன்
‪#‎அறம்கிருஷ்ணன்‬