Tuesday, 28 June 2016

‪#‎ஆலமரம்‬

‪#‎ஆலமரம்‬
ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடமுடியாது
பிறந்த வீட்டிற்கு நன்றி மறவாமல்
பிள்ளைகளை அனுப்பி 
நலம் விசாரிப்பது இங்கு மட்டும்தான்
விழுதுகளால் மட்டுமே
விழுந்து விடாமல் நிற்கும்
தாய்மரம் பட்டுபோனாளும்
தலைமுறைக்கும் நிற்கும்
ஆலம் விழுதுகளில் -ஊஞ்சல்
ஆடுவது பேரின்பம்
ஒற்றை மரமானாலும்
ஊருக்கே நிழல் கொடுக்கும்
உறவுகளை வாழ்த்தும் போது
உதாரணம் சொல்வது ஆலமரம்தானே
இடம்-‪#‎வெள்ளிச்சந்தை‬
‪#‎அறம்கிருஷ்ணன்‬




No comments:

Post a Comment