எனது தந்தைக்கு இணையாக நேசிப்போடு நான் வளர்த்த
இந்த புங்கமரத்தை
இரண்டு நாட்களுக்கு முன்பாக பிடிங்கி வீசி விட்டார்கள்.
இன்னும் இரண்டு மாதங்களில் வார்டு தேர்தல் வருகிறது.
அதற்காக அவசரகதியில் தார்சாலை போடுகிறார்கலாம்.
ஆறு வருடமாக உயிர்ப்போடு வளர்க்கப்பட்டமரம்.
என்னோட கேள்வி இதுதான்
சாலைக்கு ஒதுக்குபுரமாக இருந்த மரத்தை பிடுங்குவற்கான அவசியம் என்ன ஏற்பட்டது?
யாரிடம் அனுமதி பெற்று மரம் பிடுங்கப்பட்டது?
அப்படியே சாலைக்கு குறுக்காக இருந்தால் கிளைகளை
மட்டும் நீக்கி இருந்தால் போதுமே?
இந்த சாலைபணி செய்யும் போது குடியிருப்போர் நலசங்கத்தின் உறுப்பினர்களும் மற்றும் கட்டிட வேலை செய்பவர்களும் நிறையபேர் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.
யாருக்கும் தடுத்து நிறுத்த தோனவில்லை.
மரம் பிடங்கப்படுகிறது.கைகட்டி ,வாய்பொத்தி மொளனமாக இருக்கிறார்கள்.
காரணம் கேட்கிறப்போது மட்டும் ஓவ்வோருத்தரும் அடுத்தவர்கள் மீது குறை சொல்கிறார்கள்.
இப்படி இருந்தால் எப்படி மரம் வளர்க்க முடியும்.
வீட்டு மனை விற்ப்பவர்கள் மரம் வைப்பதற்கென்று எங்கே இடம் விடுகிறார்கள்.ஒவ்வோரு வீட்டின் படிக்கட்டும் பாதி வீதியிலிருந்துதானே தொடுங்குகிறது.
யார்குற்றவாளிகள்
இருபது அடி சாலை விடாத வீடுவிற்பனையாளர்களா?
தன்வீட்டை மற்றும் காப்பாற்றி கொள்ளும் குடியிருப்போர் நலசங்கத்தின் உருப்பினர்ளா?
எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் பிடிங்கி எறிந்து விட்டு நேராகமட்டுமே சாலைபோடும் நகராட்சி நிர்வாகமா?
எல்லாவற்றையும் வேடிக்கையாக மட்டுமே பார்க்கும் பொதுமக்களா?
இதுக்கு என்ன தீர்வு?
யாரிடம் மனு கொடுப்பது?
மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் ஓசூர் சமூக அமைப்புகள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமா?
பிறகு மரம் வளர்ப்போம் முதலில்
இருப்பதை இழக்காமல்
இருப்பதற்கு என்ன வழி?
இந்த புங்கமரத்தை
இரண்டு நாட்களுக்கு முன்பாக பிடிங்கி வீசி விட்டார்கள்.
இன்னும் இரண்டு மாதங்களில் வார்டு தேர்தல் வருகிறது.
அதற்காக அவசரகதியில் தார்சாலை போடுகிறார்கலாம்.
ஆறு வருடமாக உயிர்ப்போடு வளர்க்கப்பட்டமரம்.
என்னோட கேள்வி இதுதான்
சாலைக்கு ஒதுக்குபுரமாக இருந்த மரத்தை பிடுங்குவற்கான அவசியம் என்ன ஏற்பட்டது?
யாரிடம் அனுமதி பெற்று மரம் பிடுங்கப்பட்டது?
அப்படியே சாலைக்கு குறுக்காக இருந்தால் கிளைகளை
மட்டும் நீக்கி இருந்தால் போதுமே?
இந்த சாலைபணி செய்யும் போது குடியிருப்போர் நலசங்கத்தின் உறுப்பினர்களும் மற்றும் கட்டிட வேலை செய்பவர்களும் நிறையபேர் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.
யாருக்கும் தடுத்து நிறுத்த தோனவில்லை.
மரம் பிடங்கப்படுகிறது.கைகட்டி ,வாய்பொத்தி மொளனமாக இருக்கிறார்கள்.
காரணம் கேட்கிறப்போது மட்டும் ஓவ்வோருத்தரும் அடுத்தவர்கள் மீது குறை சொல்கிறார்கள்.
இப்படி இருந்தால் எப்படி மரம் வளர்க்க முடியும்.
வீட்டு மனை விற்ப்பவர்கள் மரம் வைப்பதற்கென்று எங்கே இடம் விடுகிறார்கள்.ஒவ்வோரு வீட்டின் படிக்கட்டும் பாதி வீதியிலிருந்துதானே தொடுங்குகிறது.
யார்குற்றவாளிகள்
இருபது அடி சாலை விடாத வீடுவிற்பனையாளர்களா?
தன்வீட்டை மற்றும் காப்பாற்றி கொள்ளும் குடியிருப்போர் நலசங்கத்தின் உருப்பினர்ளா?
எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் பிடிங்கி எறிந்து விட்டு நேராகமட்டுமே சாலைபோடும் நகராட்சி நிர்வாகமா?
எல்லாவற்றையும் வேடிக்கையாக மட்டுமே பார்க்கும் பொதுமக்களா?
இதுக்கு என்ன தீர்வு?
யாரிடம் மனு கொடுப்பது?
மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் ஓசூர் சமூக அமைப்புகள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமா?
பிறகு மரம் வளர்ப்போம் முதலில்
இருப்பதை இழக்காமல்
இருப்பதற்கு என்ன வழி?
வேறோடு பிடுங்கி விசப்பட்டது
மரம்மட்டு மல்ல
மனித நேயமும்தான்.
-அறம்கிருஷ்ணன்-
மரம்மட்டு மல்ல
மனித நேயமும்தான்.
-அறம்கிருஷ்ணன்-




No comments:
Post a Comment