ஒரு ஜென்மத்திற்கான சந்தோசத்தை ஒரு நிமிடத்தில்
உணருகிற தருணம் போல் மனம் ஒரு புள்ளியில் குவிந்து நின்றது.இந்த தருணத்திற்காகதானே இத்தனை
நாட்கள் காத்திருந்தேன் என்று நினைவு திரும்பும் போதே நெஞ்சு
குழியிலிருந்து சர்பம் ஊர்வது போல் எண்ணப் பிரளயம்
மேல் எழும்பி மூச்சுகுழாய் வழியாக சுவாச காற்றாய் இராஜராஜசோழன் எனும் மந்திரசொல் என் மெய் தீண்டியது.
நான் நின்றுயிருந்த இடம் தஞ்சை பெரிய கோயிலின்
மேல் தளம் மஹாமண்டபத்தின் மேல்புரம் கடந்து
முதல் நுழைவாயிழை தாண்டி, கருவறையின் நேர்மேலே
கருவறையை சுற்றும் வழியான சந்தாரநாளியை சுற்றி
வரும்போது கருவறை சுவற்றில் செதுக்கப்பட்டுள்ள
நடன கலையின் 108 கரணங்களில் 81 ஆவது சிற்பம்
வரை மட்டுமே முழுமையடைந்துள்ளன, அவற்றையும்
கடந்து அடுத்த தளத்திற்கு இன்னும் உயரமாக குறுகிய
படிக்கட்டுகளை கடந்து, மீண்டும் கருவறையை சுற்றி
வலம்வரும்போது நாம் காணக்கிடைக்காத இராஜராஜசோழன் வரைந்து வைத்துள்ள , ஆயிரம்
ஆண்டுகள் கழிந்தும் காலத்தால் அழியாத ஓவியங்களை
பார்க்கும் போது ஏற்பட்ட பிரமிப்பை எப்படி வார்த்தைகளில் எழுதமுடியும்.
அதையும் கடந்து மூலவரின் நேர்மேலே நின்ற பொழுது
உடம்புமுழுவதும் உள்ள மயிர்கால்களில் உயிர்வழிவது
போல் ஒருபிரம்மை,என்பிதாமகனே, உலகதமிழர்களின்
தலைமகனே, என்இராஜராஜசோழனே நீ எங்கே இருக்கிறாய்.ஆயிரம் வருடத்திற்கு முன்பு இந்த இடத்தில் நின்றுதானே பரமசுவாமியை வணங்கியிருப்பாய், அதே
இடத்தில் இப்போது நானும் கண்ணீர்மல்க நிற்கிறேன்,
எனை அடையாளம் தெரிகிறதா, நான் யாராக இருந்திருப்பேன், இந்த கோயில் கட்டுமானத்தில் எனக்கும்
ஏதேனும் ஒரு சிறிய வேலை இருந்திருக்குமோ,
இந்த இடத்தில் நின்றுதானே நீ மீட்டேடுத்த, தேவாரத்தையும், திருவாசத்தையும் மெய்யுருகி பாடியிருப்பாய்,...
ஓம் நமசிவாயா..ஓம் நமசிவாயா...ஓம் நமசிவாயா
ஓம் நமசிவாயா..ஓம் நமசிவாயா...ஓம் நமசிவாயா
என்னை சுற்றியிருந்தவர்கள்எல்லாம் ஓங்காரமிட்டு
சொல்லும் போது நான் மட்டும் வார்த்தைகள் வராமல்
தவிப்போடு நின்றது ஏன்? தந்தையை மகன் சந்திக்கும் போது வார்த்தை எப்படி வரும்.காற்றாக எனைநீ
கட்டிபிடித்திருந்ததை அப்போது என்னால் உணரமுடியவில்லை.கைகூப்பி அன்னாந்து உட்புர
கூடை வணங்கி ,அவ்விடம் விட்டு அகலா மனநிலையில்
விடைப்பெற்று கண்களில் நீர்பெருக, கீழ் வந்து தரை தொட்டப்பிறகே நான் நானாக இருக்கமுடிந்தது.
#அறம்கிருஷ்ணன்
உணருகிற தருணம் போல் மனம் ஒரு புள்ளியில் குவிந்து நின்றது.இந்த தருணத்திற்காகதானே இத்தனை
நாட்கள் காத்திருந்தேன் என்று நினைவு திரும்பும் போதே நெஞ்சு
குழியிலிருந்து சர்பம் ஊர்வது போல் எண்ணப் பிரளயம்
மேல் எழும்பி மூச்சுகுழாய் வழியாக சுவாச காற்றாய் இராஜராஜசோழன் எனும் மந்திரசொல் என் மெய் தீண்டியது.
நான் நின்றுயிருந்த இடம் தஞ்சை பெரிய கோயிலின்
மேல் தளம் மஹாமண்டபத்தின் மேல்புரம் கடந்து
முதல் நுழைவாயிழை தாண்டி, கருவறையின் நேர்மேலே
கருவறையை சுற்றும் வழியான சந்தாரநாளியை சுற்றி
வரும்போது கருவறை சுவற்றில் செதுக்கப்பட்டுள்ள
நடன கலையின் 108 கரணங்களில் 81 ஆவது சிற்பம்
வரை மட்டுமே முழுமையடைந்துள்ளன, அவற்றையும்
கடந்து அடுத்த தளத்திற்கு இன்னும் உயரமாக குறுகிய
படிக்கட்டுகளை கடந்து, மீண்டும் கருவறையை சுற்றி
வலம்வரும்போது நாம் காணக்கிடைக்காத இராஜராஜசோழன் வரைந்து வைத்துள்ள , ஆயிரம்
ஆண்டுகள் கழிந்தும் காலத்தால் அழியாத ஓவியங்களை
பார்க்கும் போது ஏற்பட்ட பிரமிப்பை எப்படி வார்த்தைகளில் எழுதமுடியும்.
அதையும் கடந்து மூலவரின் நேர்மேலே நின்ற பொழுது
உடம்புமுழுவதும் உள்ள மயிர்கால்களில் உயிர்வழிவது
போல் ஒருபிரம்மை,என்பிதாமகனே, உலகதமிழர்களின்
தலைமகனே, என்இராஜராஜசோழனே நீ எங்கே இருக்கிறாய்.ஆயிரம் வருடத்திற்கு முன்பு இந்த இடத்தில் நின்றுதானே பரமசுவாமியை வணங்கியிருப்பாய், அதே
இடத்தில் இப்போது நானும் கண்ணீர்மல்க நிற்கிறேன்,
எனை அடையாளம் தெரிகிறதா, நான் யாராக இருந்திருப்பேன், இந்த கோயில் கட்டுமானத்தில் எனக்கும்
ஏதேனும் ஒரு சிறிய வேலை இருந்திருக்குமோ,
இந்த இடத்தில் நின்றுதானே நீ மீட்டேடுத்த, தேவாரத்தையும், திருவாசத்தையும் மெய்யுருகி பாடியிருப்பாய்,...
ஓம் நமசிவாயா..ஓம் நமசிவாயா...ஓம் நமசிவாயா
ஓம் நமசிவாயா..ஓம் நமசிவாயா...ஓம் நமசிவாயா
என்னை சுற்றியிருந்தவர்கள்எல்லாம் ஓங்காரமிட்டு
சொல்லும் போது நான் மட்டும் வார்த்தைகள் வராமல்
தவிப்போடு நின்றது ஏன்? தந்தையை மகன் சந்திக்கும் போது வார்த்தை எப்படி வரும்.காற்றாக எனைநீ
கட்டிபிடித்திருந்ததை அப்போது என்னால் உணரமுடியவில்லை.கைகூப்பி அன்னாந்து உட்புர
கூடை வணங்கி ,அவ்விடம் விட்டு அகலா மனநிலையில்
விடைப்பெற்று கண்களில் நீர்பெருக, கீழ் வந்து தரை தொட்டப்பிறகே நான் நானாக இருக்கமுடிந்தது.
#அறம்கிருஷ்ணன்








No comments:
Post a Comment